
Wednesday,Aug,11, 2010,10:24am
வரலாற்றுப் புகழ்மிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ ஆலய நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 15 தினங்களுக்கு நடத்துவதற்கு படைத்தரப்பு அனுமதி வழங்கியிருக்கின்றது.
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் கிழக்குப் புறமான தொண்டமனாறுக் கடல் நீரேரி ஓரமாகவே செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்திருக்கின்றது. இந்த கடல் நீரேரியே கோவிலின் தீர்த்தக் கேணியாகவும் இங்கு அமைந்திருக்கின்றது. இரவு வேளைகளில் அங்கு எவரும் நடமாடக் கூடாது என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரவு நேரத்தில் பக்தர்கள் ஆலயச் சூழலில் தங்கியிருப்பதற்கு தற்பொழுது அனுமதி வழங்கியிருக்கின்றது.
GOOOOOOD.............
ReplyDelete