WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Thursday, August 12, 2010

செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகோற்சவ ஆலய நிகழ்வுகள் நேற்று ஆரம்பம்


Wednesday,Aug,11, 2010,10:24am
வரலாற்றுப் புகழ்மிக்க செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ ஆலய நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகியுள்ளன. இன்றிலிருந்து எதிர்வரும் 15 தினங்களுக்கு நடத்துவதற்கு படைத்தரப்பு அனுமதி வழங்கியிருக்கின்றது.

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் கிழக்குப் புறமான தொண்டமனாறுக் கடல் நீரேரி ஓரமாகவே செல்வச்சந்நிதி ஆலயம் அமைந்திருக்கின்றது. இந்த கடல் நீரேரியே கோவிலின் தீர்த்தக் கேணியாகவும் இங்கு அமைந்திருக்கின்றது. இரவு வேளைகளில் அங்கு எவரும் நடமாடக் கூடாது என படைத்தரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனினும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரவு நேரத்தில் பக்தர்கள் ஆலயச் சூழலில் தங்கியிருப்பதற்கு தற்பொழுது அனுமதி வழங்கியிருக்கின்றது.

சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்



சரல் என பெயரிடப்பட்டுள்ள புதிய செயற்கைகோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் .கடல் மற்றும் கடல் ஆழம்சார்ந்த பகுதிகளை இந்த செயற்கை கோள் ஆராயும். இந்த செயற்கைகோள் இந்தியாவின் இஸ்ரோவும், பிரான்சின் தேசிய விண்வெளியும் இணைந்து தயாரித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிருத்விராஜ்சவான் தெரிவித்துள்ளார்.

திரு.அப்துல் கலாம்

கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

தொழில்நுப்பம் செய்தியோடை....

வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி........

மைக்ரோ சொஃப்ட்(Microsoft) நிறுவனத்தினால் கடந்த வருடம் ஜூன் மாதம் பின்ங் தேடுபொறியானது (bing) அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஒருவருடம் நிறைவடைந்திருக்கும் நேரத்தில் ,அது சிறந்த ஒரு சந்தைப் பங்கினை பெற்றுள்ளது. இது யாஹூ (yahoo) நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகமாகும்

com...score எனும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பின்ங்(bing) தேடுபொறி 12.7% சந்தைப் பங்கினை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூலும் கூகிள் தேடுபொறியானது 62.6% எனும் சந்தைப் பங்கினைக்கொண்டு முதலிடத்தில் இருப்பதோடு யாஹூ தேடுபொறியானது 18.9% ஐ கொண்டுள்ளது.
மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் மகாநாட்டில் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் பின்ங் தேடுபொறிக்கு சிறந்த ஒரு வரவேற்பு ஆரம்பத்திலேயே கிடைத்துள்ளதாகவும் மைக்ரோ சொஃப்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முழுமையான ஆய்வறிக்கையினை காண.
http://www.comscore.com/Press_Events/Press_Releases/2010/7/comScore_Releases_June_2010_U.S._Search_Engine_Rankings

அன்பான வேண்டுகோள்....
வேறு இணயத்தளத்தில் இருந்துதொழில்நுட்ப பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்வது பிழைதான் . அதன் பின்னால் ஒருவருடைய உழைப்பு இருக்கிறது என்று எமக்கு நன்றகதெரியும். இதை நாங்கள் விளம்பரத்துக்காக செய்யவில்லை நாளந்தம் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அனைவருக்கும் தெரிய, அறிய வேண்டும் தகவல்கள் அனைவருக்கும் பயன்படவேண்டும...் என்பதே எமது நோக்கம்.

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
நன்றி.

ஆறுமுக நாவலர்

தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர் ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணத்தைச் சார்ந்த நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல், பெரியபுராணம் போன்ற புராண நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். தமிழுக்கும் சைவத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டு மறக்கற்பாலதன்று.  ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு வருடம் மார்கழி 5) புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.  ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.  யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது இருபதாவது வயதில் அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறிஸ்தவ வேதாகமத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.  சைவத் தமிழ்ப் பண்பாட்டுக்கு இசைவான கல்வி, சைவசமய வளர்ச்சி, தமிழ் வளர்ச்சி ஆகிய நோக்கங்களுக்காகப் பணிபுரியத் தொடங்கினார் நாவலர். சைவ சமயம் வளரும் பொருட்டு பிரசங்கம் செய்வதெனத் தீர்மானித்தார். இவரது முதற் பிரசங்கம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் டிசம்பர் 31, 1847 ஆம் நாள் நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் பிரசங்கம் செய்தார். இப்பிரசங்கங்களின் விளைவாகப் பெரும் சமய விழிப்புணர்வு ஏற்பட்டது. வண்ணார்பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில் ஒரு சைவப் பாடசாலையை ஆரம்பித்தார். சமய வளர்ச்சிக்குத் தமது முழு நேரத்தையும் செலவிடத் தீர்மானித்து செப்டம்பர் 1848 இல் தமது மத்திய கல்லூரி 3 பவுண் மாதச் சம்பள ஆசிரியப் பணியைத் துறந்தார். சைவப்பிள்ளைகளுக்குப் பாடநூல்கள் அச்சிடுவதற்கு அச்சியந்திரம் வாங்குவதற்காக நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் 1949 ஆடி மாதம் சென்னைக்கு சென்றார். அங்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப்பிரசங்கம் செய்து தமது புலமையை வெளிப்படுத்தி நாவலர் பட்டத்தைப் பெற்றார்.  சென்னையில் சிலகாலமிருந்து சூடாமணி நிகண்டுரையும் சௌந்தரியலங்கரி உரையும் அச்சிற் பதித்தபின் ஓர் அச்சியந்திரத்துடன் யாழ்ப்பாணம் திரும்பினார். தமது இல்லத்தில் வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் நிறுவி பாலபாடம், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலை மறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதியுரை, திருமுருகாற்றுப்படையுரை போன்ற பல நூல்களை அச்சிட்டார். திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, யேசுமதபரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களை வெளியிட்டார்.  இவரது பணி இலங்கையில் மட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பரவியிருந்தது. சென்னையில் திருவாசகம், திருக்கோவையார் நூல்களை 1859 வைகாசி மாதம் வெளியிட்டார். பெரியதொரு அச்சியந்திரத்தை விலைக்கு வாங்கி, சென்னை தங்கசாலைத் தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை என்ற அச்சகம் நிறுவிப் பல நூல்களையும் அச்சிட்டார். சென்னையிலும் திருவாவடுதுறை மற்றும் திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் தங்கி சைவப்பிரசங்கங்கள் செய்தபின் 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார். 1863 மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு இராமநாதபுர சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து மதுரை சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.  குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்குவேளூர், சீர்காழி ஆகிய தலங்களை வணங்கிச் சிதம்பரம் சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஸ்தாபித்தார். 1866 மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார். கருங்குழி இராமலிங்கம்பிள்ளை (வள்ளலார்) தாம் பாடிய பாடல்களைத் திருமுறைகளுடன் ஒப்பிட்டு, சில ஆலய உற்சவங்களிலே திருமுறைகளுக்குப் பதிலாகத் தமது பாடல்களைப் பாடுவதைக் கண்ட நாவலர், போலியருட்பா மறுப்பு எனும் நூலை எழுதி வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்றார். அப்போது சைவாகம விடயமாகவும் சிவதீட்சை விடயமாகவும் நாவலர் தெரிவித்த சில கருத்துக்களால் மனம் பேதித்திருந்த சில தீட்சிதர்கள், வள்ளலாரைக் கொண்டு சிதம்பராலயத்தில் 1869 ஆனி உத்தரத்தன்று ஒரு கூட்டம் கூட்டினார்கள். அங்கு நாவலரைப் பலவாறாகத் தூஷித்து விட்டு, நாவலர் தம்மை அடித்ததாக மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இவ்வழக்கில் வழக்காளிகளுக்கே அபராதம் விதிக்கப்பட்டது. சிதம்பர வழக்கின் பின் நாவலர் தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால், கோடிக்கரை ஆகிய தலங்களைத் தரிசித்த பின்னர் 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.  1870இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெஸ்லியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது. 1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடற் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.  சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி பிற்போக்குவாதியாக இருந்தார். சாதிப்பிரசாரங்களை, வர்ணாச்சிரமத்தை வலியுறுத்தினார். "தாழ்ந்த சாதியார் இடத்தில் போசனம் பண்ணல் ஆகாது" போன்ற தீண்டாமைக் கருத்துக்களைத் தனது 'முதலாம் சைவ_வினாவிடை' எனும் நூலில் வலியுறுத்தியுள்ளார். எனினும், மூடத்தனமான சாதிக் கட்டுப்பாடுகள் இருந்த அந்தக் காலத்தில், சாதியிலும் சமயமே அதிகம். சமயத்திலும் சாதியதிகமென்று கொள்வது சுருதி, யுத்தி அனுபவம் மூன்றிற்கும் முழுமையும் விரோதம் என்ற கருத்தையும் கூறியிருக்கிறார் நாவலர்.  நாவலரது கடைசிப் பிரசங்கம் 1879 ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளது குருபூசைத் தினமான ஆடிச்சுவாதி அன்று வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் இடம்பெற்றது. 1879ஆம் ஆண்டு (பிரமாதி வருடம்) கார்த்திகை மாதம் 18ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாவலரது உடல் நலம் குன்றியது. அடுத்த மூன்று தினங்களும் குளிக்க முடியாதிருந்ததால் நாவலரது நித்திய சிவபூசை வேதாரணியத்துச் சைவாசாரியர் ஒருவரால் செய்யப்பட்டது. 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை (05-12-1879) இரவு தேவாரம் முதலிய அருட்பாக்களை ஓதும்படிக் கட்டளையிட்டு அவைகள் ஓதப்படும்போது சிதம்பரம், காசி, மதுரை, திருச்செந்தூர், முதலிய புண்ணியத்தலங்களின் விபூதி அணிந்து, உருத்திராட்சம் பூண்டு, கங்காதீர்த்தம் உட்கொண்டு, கைகளைச் சிரசின்மேற் குவித்து, இரவு ஒன்பது மணியளவில் இவ்வுலகை விட்டு மறைந்தார். 

A " Proverb " is a short, traditional saying in general use. It usually expresses some obvious truth or familiar experience. Here are some proverbs that are well known in English, though some of them come from other languages. Click on each proverb for an explanation and word definitions if necessary.

நடை - நோய்க்கு தடை!

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்ற கணியன் பூங்குன்றன் வரிகளை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு அடுத்த வரி, "நன்றும் தீதும் பிறர்தரவாரா!" இதன்பொருள் "நன்மையும் தீமையும் அடுத்தவர்களால் வராது. நமக்கு நாமே காரணம்! நமது உடலுக்கு வரும் நோய்க்குக் காரணம் நாம்தான். சரிவிகித உணவுமுறை, தேவையான அளவு தண்ணீர், முறையான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, உண்ணாநோன்பு ஆகிய ஆரோக்கிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நோயின்றி நலமுடன் வாழ முடியும்.
மேற்கண்டவற்றில் உடற்பயிற்சி பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். தற்போதைய விஞ்ஞான யுகத்தில், பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லா வயதினரும் முறையான உடற்பயிற்சி செய்வது கடினம்.
இதற்கு சரியான மாற்று வழி என்ன?
நடைப்பயிற்சி ஒன்றுதான்! ஆண், பெண், சிறுவர் சிறுமியர் வயது முதிர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது நடைப்பயிற்சிதான்!
நடைப்பயிற்சியில் சாதாரண நடை, வேக நடை, நடை ஓட்டம், ஓட்டம் இப்படி பல வகை உண்டு. அவரவர் வயது, உடல்நிலை, சூழ்நிலை, மனநிலைக்கேற்ப நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்!
நடைப் பயிற்சிக்கு முன்:
* முதல்நாள் இரவு உணவை நீங்கள் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாகவே உண்ண வேண்டும்.

* தூங்குவதற்கு முன்பாக பல் துலக்க வேண்டும்.
* இரவு 10 மணிக்குப் பிறகு அவசியம் தூங்கிவிட வேண்டும்.
* காலை 4 மணி முதல் 5 மணிக்குள்ளாக படுக்கையிலிருந்து எழுந்துவிடவேண்டும்.
* எழுந்தவுடன் வாய் கொப்பளித்துவிட்டு 6 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இல்லாமல் காலைக்கடனை முடிக்க வேண்டும்.
* மலச்சிக்கல் இருப்பின் "இயற்கை எனிமா" கருவி மூலம் குடலைக் கழுவ வேண்டும்.
* நடைப்பயிற்சிக்கு முன் எதுவும் சாப்பிடக்கூடாது.
நடைப்பயிற்சி:
* போக்குவரத்து இல்லாத, சுற்றுப்புறக் காற்று மாசுபடாத நிலையில் உள்ள இடத்தில் நடக்க வேண்டும்.
* வயல் வெளிகளில் நடக்கலாம்.
* வீட்டு மொட்டை மாடி, வீட்டுத்தாழ்வாரம் ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* வீட்டுக்கு வெளியில் போக முடியாத சூழ்நிலையில் உள்ள பெண்கள் 10 x 10 உள்ள தாழ்வாரம், கூடம், அறையில் "8" என்ற எண்களை வரைந்து அதன் மேலேயே நடந்து பழகலாம்.
* கடற்கரை ஓரம், ஏரிக்கரை, குளக்கரை, கண்மாய்க்கரை ஆகிய இடங்களில் நடக்கலாம்.
* நடக்கும்போது தலைநிமிர்ந்து, நெஞ்சு நிமிர்த்தி, இரு கைகளையும் நன்றாக வீசி பட்டாள நடை நடக்க வேண்டும்.
* உடல் முழுதும், வியர்த்துக் கொட்டினாலும் கவலைப்படாமல் நடக்கவேண்டும்.
* தினமும் காலை குறைந்தது மூன்று கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். தூரத்தை விட நேரம் தான் முக்கியம்.
* மாலையில் உடலில் வெய்யில்படுமாறு நடந்தால் மிக நல்லது!
நடப்பதால் என்ன நன்மை?
* உச்சி முதல் உள்ளங்கால் வரை இரத்த ஓட்டம் ஒரே சீராக இயங்கும்.
* உடலும், மனமும் இளமையாகவும், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
* நரம்பு மண்டலங்கள் சுறுசுறுப்பாக இயங்கும்.
* நுரையீரல் வலுவடையும், மார்புச் சளி குணமாகும்.
* இதயம் சீராக இயங்கும். நாளமில்லாச் சுரப்பிகள் புத்துணர்ச்சியடையும்.
* குண்டான உடல் மெலியும், தொப்பை மறையும்.
* மன அழுத்தம் குறையும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
* ஆஸ்துமா, நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் குணமாகும்.
* கண் பார்வை தெளிவாகும். இரவில் நன்றாகத் தூக்கம் வரும்.
* முதுகு கூன் விழாமல் நிமிர்ந்து நிற்கும்.
* இடுப்பு சதைகள் மறையும். உடலில் உள்ள அசுத்தம் முழுவதும் வியர்வை மூலம் வெளியேறும்.
* உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் உறுதியடையும்.
* நாள் முழுவதும் எவ்வளவு உழைத்தாலும் சோர்வு இருக்காது.
* நோயின்றி நீண்ட நாட்கள் வாழமுடியும்.

* முதுகு வலி, மூட்டு வலி குணமாகும். உடலிலுள்ள திசுக்களுக்கு உயர்க்காற்று நிறைய கிடைக்கிறது.
* கால்களின் தசைகளுக்கு தாங்கும் சக்தி கிடைக்கும்.
* மன இறுக்கம் (டென்ஷன்) குறைந்து தன்னம்பிக்கை பிறக்கும்.
* சிந்திக்கும் ஆற்றல் பெருகும்.
* உடல் முழுவதும் மின்சாரம் பாய்வது போல் அற்புத உணர்வு பரவும்.
* மாலை வெய்யிலில் தினமும் நடந்தால் தோல் நோய்கள் வராது.
மற்ற எல்லா உடற்பயிற்சிகளையும் விட, நடைப்பயிற்சியே மிகவும் எளிமையானது. சிறந்தது. டாக்டர், மருந்து, மாத்திரை, காசு செலவில்லாதது நடைப்பயிற்சி. நடைப்பயிற்சி முடிந்து வியர்வை அடங்கியபிறகு சுமார் பதினைந்து நிமிடங்களுக்குப்பின், தண்ணீர், பழச்சாறு, அருகம்புல் சாறு குடிக்கலாம். நடைப்பயிற்சி முடிந்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக் குளிக்க வேண்டும். இதனால் தலையில் உள்ள சூடு குறைந்து மறையும். தலைக்குத் தண்ணீர், ஊற்றிக் குளிக்காமல், உடம்பில் மட்டும் படுமாறு குளித்தால் உடலின் சூடு முழுவதும் தலைக்குச் சென்று ஏதேனும் நோய் வரலாம். நடைப்பயிற்சியின் போது உடலிலுள்ள 72,000 நாடி நரம்புகளுக்கும் இரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடைகிறது.
"நடைப்பயிற்சி செய்யாதவர்களுக்கெல்லாம் மரணம் ஒவ்வொரு இரவும் படுக்கையைத் தட்டிப் போடுகிறது" என்பதை மறவாதீர்கள். "சூரிய ஒளி, தண்ணீர், காற்று, சரிவிகித உணவு, நடைப்பயிற்சி, சரியான ஓய்வு இவை ஆறும் உங்களிடம் காசு வாங்காத டாக்டர்கள்!" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்

Globalization and Climate Change - Tamil Economics Articles



இன்றைய உலக அரசியலில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் முக்கிய தலைப்பாக பருவநிலைமாற்றம் உள்ளது. இன்றைய மிக முக்கிய அவசர அவசிய கேள்வியாக அனைவரின் முன் உள்ளது எதுவெனில் மனிதருடைய செயல்கள் பருவநிலை மாற்றத்தை மாற்றுகின்றதா? புவி வெப்பமாதல் உண்மையா? அப்படியென்றால் அந்த அளவுக்கு இயற்கை பேரழிவுகளை அடிக்கடி உண்டு பண்ணுமா? அப்படியானால் அதற்கேற்றாவறு நாம் நம்மை மாற்றிக் கொள்ள முடியுமா? அல்லது ஏற்படும் மாற்றங்களை குறைக்க முடியுமா? ஏற்படாமலே தடுக்க முடியுமா? ஏனென்றால் பூமியின் பருவநிலை முறை என்பதும் மிகவும் சிக்கலானது. அதை விட மனிதர்களுடைய போக்கும் எதிர் விளைவுகளும் அதைவிட இந்த கேள்விகளுக்கெல்லாம் விடைகாண பல அறிவியல் அறிஞர்கள் சவாலாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்து வருகிறார்கள்.
மூன்று முக்கிய மாசுபடுத்தல் சம்பந்தமான விவாதங்கள் மக்கள் மனதில் அடிக்கடி தோன்றுகின்றன முறையே 1) புவி வெப்பமாதல், 2) ஓசோன் படலத்தில் ஓட்டை, 3) அமில மழை இந்த மூன்று அறிவியல்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாட்டில் ஏற்படும் மாசு காரணமாக வேறொரு நாடு பாதிக்கப்படுகின்றது. உலக மாசுபடுதலில் ஒரு மனிதன் அல்லது ஒரு நாட்டின் செயல்பாடு மற்ற எல்லா நாட்டு மக்களையும் பாதிக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இது உலக நாடுகளின் பிரச்சினை என்பதால் எல்லா நாடுகளும் இதற்கு தீர்வு தேட வேண்டியுள்ளது.
உலக அரசுகளின் குழுவான (Inter Governmental Panel on Climate Change-IPCC) 1988ல் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் கட்டம் நவம்பரில் ஜெனீவாவில் நடைபெற்றது. அது "அறிவியல் அறிக்கை" தயாரிப்பது பற்றியதாகும். முதல் அறிவியல் அறிக்கை மே மாதம் 1990 வெளியிடப்பட்டது. இதில் மார்கரட் தாட்சரின் பங்கு கணிசமானது.
இரண்டாவது உலக பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு 1990ல் ஜெனீவாவில் நடைபெற்றது. மேலும் 1992ல் ரியோடி ஜெனீரோவில் 160 நாடுகள் பங்கு பெற்ற ஐக்கிய நாடுகளின் மாநாடான "சுற்றுச் சூழலும் வளர்ச்சியும்" எனும் தலைப்பில் நடைப்பெற்றது (United Nation Conference on Environmental and Development (UNCED) இதில் ஏறத்தாழ 25000-திற்கும் அதிக அளவில் உலகத்தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும். இதையே Earth Summit என்று குறிப்பிடுகிறோம்.
எப்படி வானிலை அறிக்கை (Weather Report) முழுவதும் உண்மையாக இல்லாவிட்டாலும் வருவதை ஓரளவுக்கு முன்னரே கணித்துக் காட்டக்கூடியதாக இருக்கின்றதோ அதேபோல் பருவநிலை மாற்றம் பற்றிய கணிப்பையும் எடுத்துக் கொள்ளலாம். அறிவியல் பயிலாத அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது அதுவே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
பருவநிலையில் உண்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா!
சுற்றுச் சூழலில் முக்கிய பிரச்சனையாக இருப்பது புவி வெப்பமடைதல் ஆகும். வானிலை நாளுக்கு நாள் மாறும் போது பருவநிலை மட்டும் எப்போதும் ஒரே சிராக அமைகிறது. ஒரு பருவ நிலைக்கும் மற்றொரு பருவநிலைக்கும் இடையில் வெப்பநிலையிலும் ஈரப்பதத்திலும் மனிதர்கள் உணரும் அளவிற்கு போதுமான மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படுகிறது என்பது பொதுவான அறிவு. ஆனால் வானிலை போதுமான அளவுக்கு நிலைத்தன்மை உடையதாக இல்லாமல் ஏய்ப்பதாக அமைகிறது. 1962/63 மற்றும் 1981-82ல் நாம் எதிர்பாராத அளவு குளிர் நிலவியது. ரஷ்ய விவசாயிகள் மிகப்பெரிய பேரழிவையும், பஞ்சத்தை ஒரு வருடத்திலும், செழிப்பான விளைச்சலை மறுவருடத்திலும் ஏற்படுத்தி அதற்கு அடுத்த வருடமே பெரும் உணவு பற்றாக்குறையை சந்திக்க வைத்துக்கொண்டிருந்தது. வெவ்வேறு வெப்பநிலை ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் தனித்தனியே பருவ கால மாற்றங்கள் ஏற்படுத்துவதால் இவை வானிலை அமைப்பில் முரணின்மையை (நிலைத்தன்மையற்றதாக) நிலைப்படுத்த முடியாமல் போனது மட்டும் இன்றி பருவகாலத்தையும் சிராக அமைக்க முடியவில்லை. 1920ல் இருந்து 1960 வரை ஏறக்குறைய ஒரு இணக்கமான அதற்கும் மேலாக ஒரு முன்கூட்டியே அறியும் அளவக்கும் பருவகால மாற்றம் இருந்ததால் விவசாயிகளுக்கு அது ஒரு பொன்னான செய்தியாக அமைந்தது.
1960-க்கு பிறகு மக்கள் பெருக்கம் எப்பொழுதும் விவசாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அப்பொழுதே அனைத்தும் மாற துவங்கியது. முன்னிருந்த அமைப்பு முறைகள் மாற்றப்பட்டன. பருவகால நிலைத்தன்மை மறைய ஆரம்பித்தது. அப்பொழுதே வானிலை ஆராய்ச்சியாளர்கள் பருவகால மாற்றத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் எனவும், இனி ஒருபோதும் 1920-ல் இருந்து 1960-வரை இருந்த இணக்கமான பருவ மாற்றம் ஏற்பட்டது என்று கருத்து தெரிவித்தனர்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட தொழில்சாலை மற்றும் வேறு சில நடவடிக்கைகளான காடுகளை அழித்தல் ஆகிய செயல்கள் அதிகரிக்கும் அளவில் நச்சுவாயுக்களை வெளியேற்றுகின்றன. மிக முக்கியமான கரியமிலவாயுவான CO2 புவியின் காற்று மண்டலத்தில் செலுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் உமிழப்படும் கரியமிலவாயு சுமார் 7000 மில்லியன் டன்களாகும். இது ஏற்கெனவே உமிழப்பட்ட வாயுவோடு சேர்வதாலும், இன்னம் 100 வருடங்களுக்கு மேல் இந்த அளவு தொடரவிருப்பதாலும் கரியமிலவாயுவின் அளவு அதிகரிக்கிறது. ஏனெனில் கரியமிலவாயு வெப்ப கதிர்களை தன்னுள் ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. இது புவியின் மேற்பரப்பில் ஒரு போர்வை போல செயல்பட்டு புவியை முன்பில்லாத அளவு வெப்பமாக வைக்கிறது. எனவே அதிக வெப்பமானது காற்று மண்டலத்தில் உள்ள நீராவியில் வெப்பத்தை அதிகரிக்கிறது. மேலும் புவியை வெப்பமடைய செய்கிறது. இதன் காரணமாக உலக வெப்பநிலை அதிகரிக்கிறது. அது பூலோக பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. இந்நிலை தொடருமானால் 10 வருடங்களுக்கு ஒரு முறை புவியின் சராசரி வெப்பநிலை 0.25C ஆக உயரும் அல்லது 100 வருடத்தில் 2.50C ஆக உயரும் என்று ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
உலகமயமானதின் விளைவாக அங்காடி விரிவடைந்துள்ளது. எனவே வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் அதிக அளவு உற்பத்தி செய்ய விழைந்துள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை அதிக அளவு தேவைப்படுகிறது. அதுமட்டும் இன்றி அதிக அளவு நிலக்கரி உபயோகப்படுத்தப்பட்ட காரணமான தொழிற்சாலையில் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளான ஆசிய நாடுகளின் வளங்களை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலம் பொருளாதார வளச்சியை அடையமுயல்கின்றன. ஆனால் இயற்கை வளங்கள் எப்பொழுதும் அளவாகவே கிடைக்கும் என்பது இயற்கை உண்மை. எனவே அவற்றை பயன்படுத்தி ஒரு சிரான பொருளாதார வளர்ச்சி காண்பது என்பது எதிர்காலத்தில் பெரிய கேள்விக்குறியான ஒன்று என்னும் உண்மையை அரசாங்கங்கள் அறிந்துள்ளன. இருப்பினும் மாற்று வழிகளை ஆராய அலட்சியம் காட்டப்படுகிறது.
M.S. சுவாமிநாதன் அவர்கள் குறிப்பிட்டதாவது ஆசியாவின் அரிசி உற்பத்தி 4% அளவுக்கு பருவகால மாற்றத்தால் குறையலாம் என்று கூறியுள்ளார். இது 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் திரு.கபில்சிபல் அவர்கள் இந்தியாவின் செயல்திட்டம் (Action Plan) பருவநிலை மாற்றத்திற்கானது. 2008-ல் தயாராகிவிடும் என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் தொழிற்சாலைகளில் குறைவான கார்பன் பொருளாதாரத்துக்கு விரைவாக மாறவேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
ஆசியா மீது பருவகால மாற்றத்தில் ஏற்படுத்திய விளைவுகளின் அறிக்கையை அரசுகளுக்கு இடையிலான சபை வெளியிட்டது. அவை பின்வருமாறு,
* கடல் மட்டம் 40 சென்டி மீட்டர் அளவுக்கு 2100-க்குள் உயரும்.
* கடல் நீரால் பெருமளவிலான நிலப்பரப்பு மூழ்கடிக்கப்படலாம்.
* கடல் சார்ந்த நகர மக்கள் பாதிக்கப்படலாம்.
* நிலம் வீடு கடல் நீரால் மூழ்கடிக்கப்படலாம்.
* கடல் வாழ் உயிரினங்களுக்கு புகலிடமாக உள்ள பவழப்பாறைகள் 80% அழிந்துவிடக்கூடும்.
வற்றாத ஜீவநதிகளான கங்கா, பிரம்மபுத்திரா நதிகள் வரண்டுபோகவும் வாய்ப்புள்ளது. வெப்பநிலை தெற்கு ஆசியாவில் 1.20 செல்சியசாக சராசரியாக 2040-ல் உயரும். இதைவிட இன்னும் அதிகமாவதற்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் வறுமை அதிகரிக்கலாம். கிராமப்புறங்களில் பசி தாண்டவமாடலாம். காரணம் விவசாயம் செய்வதற்கு நீர் கிடைப்பது என்பது பெரிய பிரச்சனையாகிவிடும். வெப்பத்தின் காரணமாக ஏற்படும் நோய்களால் ஏழை மக்களும் வயதானவர்களும் வெகுவாக பாதிக்கப்படலாம். இதில் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளும் அடங்குவர்.
இவற்றையெல்லாம் தடுக்க வேண்டுமென்றால் இந்தியா எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்த வேண்டியது அத்தியாவசியமானது.
இந்தியா இயற்கை எரிசக்திகளில் கவனம் செலுத்தாவிட்டால் அது தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும். இந்தியாவினுடைய எரிசக்தி (Energy) அதிகமாக நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஒரிஸா, ஜார்க்கண்ட மற்றும் பீகாரின் கிராமப் புறங்களிலிருந்து கிடைக்கிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. இப்படி சுரங்கத்திற்கு நிலம் எடுக்கப்படுவதால் அடித்தட்டு மக்களே அதிகம் பந்தாடப்படுகிறார்கள். இந்த சுரங்கங்களிலும் அவற்றிலிருந்து வெளிவரும் கழிவுகளிலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகின்றது. இப்படி உற்பத்தியாகும் எரிசக்தி மூலம் உற்பத்தியாகும் பெரும்பாலான இரும்பு ஆலைகளுக்கும் அலுமினிய உற்பத்திக்கும் செலவிடப்படுகின்றது இதன் மூலம் உற்பத்தியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவது மிகவும் யோசிக்கவைக்கின்றது. (சினா மற்றும் அமெரிக்கா இன்னும் சில நாடுகள்) பங்களாதேஷ் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாகும். எரிசக்தியை சூரியன், காற்று மூலம் பெறவேண்டும் அதிக வெப்பம் தாங்கி விளையும் பயிர்களையும் கடல் உப்புநீர் பாதித்த நிலங்களையும் உற்பத்திக்கு பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இயற்கை எரிவாயுக்களை இந்தியா பாதுகாத்தல்
IPCC அறிக்கை தயாரிப்பில் ஈடுப்ட்டவர்களில் 20 பேர் இந்திய அறிவியலறிஞர்கள். மக்கள் தொகை வளர்ச்சியும் சரியான திட்டமிடல் இல்லாததும் இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்துகின்றன. அதிக அளவு "மாசு" ஏற்படுத்துவது என்று பார்த்தால் அமெரிக்காவே முதலாவதாக வருகிறது.
IPCC Report தயாரிப்பில் ஈடுபட்ட 20 அறிஞர்களும் அமெரிக்க உதவி ஜனாதிபதியான அல் கோருடன் இந்த ஆண்டு நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நமக்கு தெரியும் வெள்ளமும் வறட்சியும் இனி வரும் கலங்களில் அதிகரிக்கும் ஆனால் மக்கள் இவ்விரண்டிலும் பாதிப்பு ஏற்படும் இடங்களில் குடியிருப்பது தான் கொடுமை. இந்தியா 4-லிருந்து 5 சதவிகிதமாகவும் உலக நாடுகளில் மாசு செய்யும் இடத்தில் இந்தியா முதல் 10-ல் வருகிறது. அமெரிக்கா 20-25% மாசு ஏற்படுத்தி முதலாவதாக வருகிறது.
பிரதிபலிப்பு
அறிவியல் அறிஞர்கள், இவை அனைத்துக்கும் மனித நடிவடிக்கையே காரணம் என்று கூறும் நிலையில் அரசியல்வாதிகளும் மற்ற முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களும் செலவுகளை கருத்தில் கொண்டு பருவகால மாற்ற எச்சரிக்கையை எதிர்கொள்ள நடிவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒரு சில நடிவடிக்கைகளை மிக குறைந்த செலவில் செய்ய இயலும் மற்றும் சுலபமாகவும் செய்ய முடியும். உதாரணமாக சக்தியை சேமிப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற முன்னேற்ற திட்டங்கள் மற்றும் வேறு சில திட்டங்களான காடுகள் அழிப்பதை குறைக்கும் நடிவடிக்கை மற்றும் மரங்களை நடுதல் ஆகியவற்றை ஊக்குவித்தல் ஆகும்.
இவைமட்டும் அல்லாமல் மற்ற சில செயல்களான கரியமில வாயுவை வெளிவிடாத சக்தி வகைகளுக்கு மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தல் அதாவது திரும்ப பயன்படுத்த முடிகின்ற சக்தி வகைகளான பயோமாஸ், நீர், காற்று அல்லது சூரிய சக்திகளை வளர்ந்த நாடுகளும் வளரும் நாடுகளும் சிறிது காலம் எடுத்துக்கொண்டாலும் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் சாத்தியமும் உள்ளது. தற்சமயம் எது முக்கியம் எனில், எதிர் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தற்சமயம் திட்டங்கள் தீட்ட தயாராகிக் கொள்வதுதான். என்வே எதிர்காலத்தில் நல்ல நீர் மற்றும் பற்றாக்குறை இல்லாத உணவு அளிப்பு ஏற்பட இப்போது இருந்தே நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மூலம்: உலக சக்தி ஆலோசனை சபை

அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தான் இருந்தார். அவர் இறந்ததன் பிறகு இன்றைக்கு உலகில் யாருக்குமே அந்த மொழியை பேசத் தெரியாது.
அவர் இறந்த தினத்தோடு உலகில் உள்ள பல மொழிகளில் ஒரு மொழி அழிந்து விட்டது. மரியா ஸ்மித்திற்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தும், யாருமே "ஏயக்" மொழியை கற்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. எல்லோரைப் போன்று அவர்களும் ஆங்கிலம் கற்பதும், பேசுவதும்தான் நாகரீகமானதும், தேவையானதும் என்ற கருத்தோடு இருந்து விட்டார்கள். "ஏயக்" மொழியைப் பேசும் கடைசி மனிதராக தான்தான் இருக்கப் போகின்றேன் என்ற விடயம் மரியா ஸ்மித்திற்கு அன்றைக்கு தெரிந்திருந்ததா என்பதும் தெரியவில்லை.
"ஏயக்" மொழி பேசத் தெரிந்த மரியா ஸ்மித்தின் ஒரு சகோதரி 1993இலேயே இறந்து விட்டார். அதன் பிறகு மரியா ஸ்மித்தோடு "ஏயக்" மொழியில் உரையாடுவதற்கு யாருமே இருக்கவில்லை. "ஏயக்" மொழி அழிந்து விடக் கூடாது என்பதற்கு மரியா ஸ்மித் சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஒரு மொழியியல் வல்லுனரின் உதவியோடு "ஏயக்" மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் தயாரித்தார். இனிமேல் யாராவது இந்த நூல்களின் உதவியோடு ஏயக் மொழியை கற்றுப் பேசினால் மட்டும்தான், அந்த மொழி மீண்டும் உயிர் பெறும்.
ஏயக் மொழிக்கு மட்டும்தான் இந்த நிலைமை என்று இல்லை. உலகின் பெரும்பாலான மொழிகளின் நிலைமை இதுதான். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். மரியா ஸ்மித் வாழ்ந்த அலாஸ்காவில் பேசப்படுகின்ற மொழிகளில் மேலும் 20 மொழிகள் விரைவில் அழிந்து விடும் நிலையில் இருக்கின்றன. உலகம் எங்கும் மொழிகள் அழிந்து வரும் வேகம் அதிகரிக்கின்றதே தவிர குறையவில்லை. ஒரு மொழி அழிகின்ற பொழுது ஒரு இனத்தின் பண்பாடு அழிகிறது. இன்னும் சொல்வது என்றால் ஒரு இனமே அழிகிறது. அழிகின்ற மொழிகளில் பெரும்பாலானவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான மொழிகள். அந்த மொழிகளுக்குள் மனித குலத்தின் வரலாற்றின் பெரும் பகுதி புதைந்து கிடக்கின்றது. மொழிகளோடு மனித குலத்தின் வரலாற்று உண்மைகளும் அழிந்து போகின்றன. இன்றைக்கு உலகிலே வாழுகின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளைப் பேசுகின்றார்கள். நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆறாயிரம் மொழிகளிலே அறுநூறு மொழிகள் மட்டுமே மிஞ்சியிருக்கும். மிச்சம் ஐந்தாயிரத்து ஐந்நூறு மொழிகளும் அழிந்து விடும். இது மொழியியல் வல்லுனர்களின் தீவிரமான ஒரு எச்சரிக்கை. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகின்றார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு மொழிகளை நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்நூறு மொழிகளை வெறும் பத்துப் பேர்தான் பேசுகிறார்கள்.
ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு ஆகக் குறைந்தது ஒரு இலட்சம் பேராவது அந்த மொழியை பேச வேண்டும் என்பது மொழியியல் வல்லுனர்களின் கருத்து. அந்த வகையில் தமிழ் மொழி தற்போதைக்கு அழியாது என்று நம்பலாம். உலகில் மிக அதிகமானவர்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் தமிழும் இருக்கின்றது. கல்வெட்டில் இருந்து கணினி வரை தமிழ் மொழி பரந்து நிற்கின்றது. ஆனால் ஒரு மொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் காரணங்களையும் தமிழ் மொழியும் கொண்டுதான் இருக்கின்றது என்பது இதிலே ஒரு அபாயகரமான செய்தி. ஒரு மொழி அழிவதற்கான முக்கிய காரணங்களாக சில விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன. மொழிக்குள் மற்றைய மொழிகளின் ஊடுருவலும் ஆதிக்கமும், வட்டாரப் பேச்சு வழக்குகள் தனி மொழிகளாக கிளர்வது, இளந்தலைமுறை மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் அற்று இருப்பது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். வேற்று மொழிகளின் ஊடுருவல் தமிழுக்குள் மித மிஞ்சிப் போய் கிடக்கின்றது
எத்தனையோ சொற்களை, அவைகள் தமிழ் சொற்களா இல்லையா என்பதை அறிவதே மிகக் கடினமாக இருக்கின்றது. அதே போன்று பல துறைகளில் ஆங்கிலம் போன்ற மொழிகளின் ஆதிக்கம் இருக்கின்றது. வட்டாரப் பேச்சு வழக்கு மொழிகளாக இருந்தவை தனி மொழிகளாக பிரிந்து போனதையும் தமிழ் மொழி சந்தித்திருக்கின்றது. இன்றைக்கு தமிழ் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான வட்டார மொழிகள் நாளை தனி மொழிகளாக மாறி விடாது என்று உறுதியாக நம்புவதற்கு போதுமான காரணங்கள் இல்லை. "பொதுவான தமிழ்" இன்றைக்கு எழுத்தில் மட்டும்தான் இருக்கின்றது. ஆனால் "வட்டார மொழி இலக்கியங்கள்" என்ற பெயரில் வருகின்ற அதிகரித்த படைப்புக்கள் இதற்கும் முடிவு கட்டி விடுமோ என்ற அச்சத்தைக் கொடுக்கின்றது. தமிழ் நாட்டின் சென்னை போன்ற பெரு நகரங்களிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் இளந்தலைமுறை தமிழை எவ்வளவு தூரம் பேசுவதற்கும், கற்பதற்கும் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர்களாக இருப்பதுதான். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் முப்பது ஆண்டுகளில் அழியப் போகின்ற மொழிகளில் ஒன்றாக தமிழும் இருப்பதாக செய்தி ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் முப்பது ஆண்டுகளில் எல்லாம் தமிழ் அழிந்து விடாது. முப்பது ஆண்டுகள் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதே வேளை நீண்ட காலத்திற்கு நாம் இப்படி இறுமாப்போடு இருக்க முடியாது. பேசுபவர்களின் எண்ணிக்கையில் மட்டும் ஒரு மொழியின் இருப்பு தங்கியிருக்க முடியாது. எண்ணிக்கையும் மாறுபடக் கூடிய ஒன்றுதான். மொழி அழிவதற்கு தேவையான மற்றைய காரணிகளும் தமிழில் இருக்கின்றன. ஆகவே தமிழ் மொழி நீடித்து நிலைக்க வேண்டும் என்ற சிந்தனை ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் இருந்தால் மட்டும்தான், தமிழ் மொழி நீண்ட காலத்திற்கும் நிலைக்கும். இல்லையென்றால் "அழிந்து போன மொழிகளின் பட்டியலில்" தமிழ் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடும். மரியா ஸ்மித் ஜோனஸின் உடலோடு "ஏயக்" மொழியும் புதைக்கப்பட்டுவிட்ட இந்த நாளில் தமிழர்களைப் பார்த்து சொல்லக் கூடிய செய்தி இதுதான்.
தமிழரோடு தமிழில் பேசுவோம்...
தமிழன் என்று சொல்வோம்....
தலை நிமிர்ந்து நிற்போம்.....
"தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை..."

ஆறுமுக நாவலர் (1822 - 1879) ( Arumuka Navalar )

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai )

திருநெல்வேலியில் தோன்றிய ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றவர். செந்தமிழ் நலங்கனிந்த சொற்பொழிவாற்றுவதிலும் உரை நடைபெழுதுவதிலும் ஒப்பற்ற ஆர்வமும் திறமையும் உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். "திருவள்ளுவர் நூல்நயம்", "தமிழகம் ஊரும் பேரும்", "தமிழின்பம்" போன்ற இவர்தம் நூல்கள் இனிமைமிக்க செந்தமிழ் உரைநடைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். இவர் தம் தமிழ்த் தொண்டைப் பாராட்டி இவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் "டாக்டர்" பட்டம் சூட்டியது.
தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்.
- ரா.பி. சேதுப்பிள்ளையின் (தமிழின்பம்).

செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்

ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு நடைபெறும் என அறிவித்தார். ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் நொபாரு கராஷிமா, தமிழக முதல்வரின் அவசரங்களுக்குப் பணிந்துவிடாமல், "2011, ஜனவரியில் நடத்திக்கொள்ளலாம் கால அவகாசம் போதாது" என ஒப்புதல் அளிக்கவில்லை. கருணாநிதி அதனிடத்தில் முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு அறிவிக்கிறார். இதற்கு எதிர்வினையாக, 23.9.2009ல், தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டது. சென்னை எழும்பூரிலுள்ள இக்ஷா மையத்தில் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் மட்டுமே. முன்பதிவு செய்யப்பட்ட அறையை, நிர்வாகத்தை மிரட்டி ரத்து செய்து, கூட்டத்தை நடத்தவிடாமல் செய்தது காவல்துறை. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு முடிவுகளில் ஒன்றாக, மாநாடு எங்கு நடைபெற உள்ளதோ, அந்த கோவை நகரில் 4.10.09 அன்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பெற்றது. நடத்தியதற்கு ஒருங்கிணைத்தவர்களையும், அனுமதியளித்த ரூபி மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகத்தினையும் காவல்துறையும் கல்வித் துறையினரும் இணைந்து உண்டு இல்லை என ஆக்கினர்.
செம்மொழித் தமிழ் மாநாடு எதிர்ப்பு என்ற பெயரில், நேரடியாக எந்த அமைப்பும் சிறுநிகழ்ச்சியையும் நடத்த இயலவில்லை. தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பு, சென்னையில் "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - விளக்கப் பொதுக்கூட்டம்" ஒன்றினை நடத்தமுயன்றது. புலவர் புலமைப்பித்தன், தியாகு, புலவர் இறைக்குருவனார், எழுத்தாளர் சூரியதீபன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிகழ்வுக்கு முந்திய நாள் ஏற்பாட்டாளரை அழைத்து அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தனர் காவல்துறையினர். அனைத்து இடங்களிலும் முளையில் கிள்ளி எறியும் கொள்கையை காவல் துறையினர் தீவிரமாகக் கடைபிடித்தனர். எதிர்ப்புக்கெனவே உருவாக்கப்பட்ட, தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பும் தமிழ்மலர் 2010 நூல் வெளியீடு என்ற இன்னொரு பெயரில் ஒளிந்துகொண்டு, கோவை 13.6.2010ல் ஒரு நிகழ்வை நடத்தியது.
"தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு மாநாட்டு அவசரத்தில் இருக்கிறார். அந்த அவசரத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை எப்படி நடத்த வேண்டுமென்கிற முறைமையைப் புறந்தள்ளி, ஒரு கட்சி மாநாட்டை நடத்துவதுபோல் அறிவிப்பு செய்தார்... முதலாவது செம்மொழி மாநாட்டினை நடத்த முடிவு செய்ததில், தமிழ் ஆய்வு பற்றிய அக்கறையோ, செம்மொழி குறித்த நேர்மை உணர்வோ இல்லை. ஒரு மாநாட்டுக் கொண்டாட்டத்துக்கான ஆர்வந்தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. அதற்கும் மேலாக ஈழத் தமிழர் பிரச்சனையில் உலக அளவில் சரிந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் உயர்த்த இப்படி ஒரு மாநாடு" என விளக்கி, 1.11.2009ல், தமிழ்ப்படைப்பாளிகள் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில், "தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் நான்கு பக்கமுள்ள ஒரு கடிதம் அனுப்பினோம். தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து, உலகெங்குமுள்ள தமிழறிஞர்களுக்கு, ஏறத்தாழ இருநூறு பேருக்கு மின்னஞ்சல் செய்திருந்தோம்.
அனுப்பப்பட்டவர்களில் உலகத் தமிழாராய்ச்சிக் குழுவின் தலைவர், ஜப்பானிய தமிழறிஞர் நொபாரு கராஷிமா, பிரான்சின் தமிழறிஞர் பேரா.பிரான்காய்ஸ் குரோ (Prof.Francois Gros) போன்ற சிலர் வருகை தரவில்லை. பின்லாந்தின் அஸ்கோ பாப்லோ, பேரா.கா.சிவத்தம்பி போன்ற பலர் பிறநாடுகளிலிருந்து வந்து மாநாட்டில் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் நினைவு கூர்ந்து மாநாட்டுக்கு ஒரு மாதமிருக்கும். மீண்டும் மின்னஞ்சலில் அனுப்பினோம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலுமுள்ள தமிழறிஞர்களுக்கு நான்கு பக்க வேண்டுகோள். 500 பேருக்கு மேல் அஞ்சலில் அனுப்பப்பட்டது. முன்னெதிர்ப்புகள், தமிழக அளவில் சிலவும், இணைய தளங்களில் பரவலாகவும் எடுக்கப்பட்டன.
இத்தகைய முன்கூறல்களைத் தாண்டி, தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியுள்ளனர். நடைபெற்றது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு அல்ல. முதலாவது செம்மொழித் தமிழ்மாநாடு - கலந்துகொள்வதில், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தருவதில் என்ன தவறிருக்க முடியும் என்ற சமாதானத்தை கலந்துகொண்டவர்கள் தமக்காக வைத்திருக்கலாம். அத்தகைய சமாதானத்துக்கும் பங்கேற்பு விருப்புக்கும் பின்னால் செயல்பட்ட அதிகார அழுத்தத்தையும், அறிவின் வன்முறையையும் காணத் தவறக்கூடாது.
அரசதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநாட்டு ஆதரவு கட்டியமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழ் மாநாட்டு அறிவிப்பைச் செய்தவுடன், பா.ம.கவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மாநாட்டில் பங்கேற்போம் என முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். இது கூட்டணி உருவாதற்கான அரசியல் உத்தியாகப் பார்க்கப்பட்டது. இக்காலத்தின் எந்த அரசியல் கட்சியும் தங்கள் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள், மக்கள் என்ன கருத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றறியும் சனநாயக முறையைக் கைவிட்டதால், மேலிருந்து முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை கொண்டு இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நிலைப்பாடு எடுக்குமுன் தனது கலை இலக்கியப் பெருமன்றத்தினரிடம் ஆலோசனை கலக்காமல் கண் தன்மூப்பாய் முடிவெடுத்தது. ஆனால், "இந்த மாநாட்டிற்கான நோக்கம் உலகத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்குத்தான் செய்த துரோகத்தை மறைப்பதுதான். அதனுடைய நோக்கம் உயர்வானதல்ல" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஒரு நேர்காணலில் (16.5.2010) அறிவித்தார்.
இந்த ஆண்டு (2010) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற கவிஞர் புவியரசு "அது செம்மொழி மாநாடோ, உலகத் தமிழ்மாநாடோ இல்லை. அது தி.மு.க.மாநாடு, நான் அதில் எந்த வகையிலும் பங்கேற்க மாட்டேன்" என்று கோவை மண்ணிலிருந்து அறிவித்தார். இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் இளையபாரதி தொடர்பு கொண்டு சென்னை சங்கமத்துக்குள் கவிஞரை இழுக்க முயன்றபோது திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மாநாட்டுக்குமுன் கவிஞர்கள் இன்குலாப், இளம்பிறை, மாலதி மைத்ரி, சி.மோகன் போன்றோர் கவிதைகளும், மாநாட்டுக்குப்பின் சுகிர்தராணியின் கவிதையும் எதிர்ப்பைப் பேசின. சூரியதீபன், வெளி.ரங்கராஜன் போன்றோரது கட்டுரைகள் எதிர்ப்பை மையம் கொண்டு வெளிப்பட்டன.
எதிர்கட்சிகளில் அ.தி.மு.க., ம.தி.மு.க. தேர்தல் உத்தி அடிப்படையில் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்த்தன. தமழ்த் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள், தமிழின அமைப்புக்கள், போன்றவர்தாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இயங்கினர்.
முத்தமிழறிஞருக்குப் புகழாரம் சூட்ட தமிழறிஞர்கள் முண்டியடித்த கோவை மாநகரில் பிப்ரவரி, 6, 7 நாட்களில் புதிய தமிழகம் கட்சியின் க.கிருஷ்ணசாமி. "உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு" நடத்தியதை அரசு விரும்பவில்லை. கருணாநிதியின் உலகத் தமிழ்நாயகன் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வு அது. மாநாட்டை நடத்தவிடாமல் செய்ய மாவட்ட நிர்வாகமும், முதல்வரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகினர். சனவரி 15ல் காவல்துறை மாநகர ஆணையர் அனுமதி மறுத்தார். கருத்துரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாநாட்டு ஏற்பாட்டாளர் உயர்நீதிமன்றம் வரை சென்றார். மாநாடு நடத்த ஆறு நாட்கள் இருந்த நிலையில், உயர்நீதி மன்றம் மறுபடியும் விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளருக்கு, ஆணையிட்டு, அனுமதிக்கு வழிகாட்டியது. மாநாடு நடைபெற இரண்டு நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் அனுமதி கிடைத்தது. செம்மாழித் தமிழ்மாநாடு முடியும்வரை, சிறு முனகல்களைக் கூட கேட்கவிடாமல் கருத்துரிமை காத்தார் கருணாநிதி. அரசியல் தளத்தில் சிறு அசைவும் எழாமல் பார்த்துக்கொண்டு தமிழறிஞர்கள் (கா.சிவத்தம்பி உட்பட), கலை, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் வட்டாரத்தை மிகக் கவனமாக தன்பக்கம் நிறுத்துவதில் முன்னேறினார் கனிமொழி.
ஏற்கனவே இலக்கிய உலகில் அப்பாவுக்கு மதிப்புத் தராத இலக்கிய வட்டாரத்தினர் மத்தியில்தான், தேடிக் காத்துவைத்த மதிப்பை பயன்படுத்திக் கொண்டார். உடல்நலமின்மை, அப்போலா மருத்துவமனைச் செலவு என்ற காரணஙகளால், இவருடைய அறிவுவட்டத்துக்குள் முதலில் அடைக்கலமானார் எழுத்துப்புலி ஜெயகாந்தன். சிந்தனையாளர், ஆய்வாளர் என்ற அடையாளமும் நேசமான அணுகுமுறையும், அரசியல் வன்முறை- அறிவு வன்முறை இணைவாய் செயல்பட்டு, தமிழின உணர்வோடு இருந்த சிலரையும் தின்று தீர்த்திருந்தன.
தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்த கடந்த 30 ஆண்டுகளாய்த் தவறினார் என்று விமரிசித்தவர்கள்கூட, கோமானுடன் எதற்கு பிணக்கு என்று அச்சம் மேலேற இணைந்தனர். அரசியல் அதிகாரத்தின்முன் அறிவின் கம்பீரங்கள் மண்டியிட்டதை நேரிலேயே கண்டோம். ஆட்சியதிகாரத்தில் இல்லாமலிருந்து இது போன்றதொரு மாநாட்டை நடத்தியிருந்தால், தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள், இலக்கிய ஜாம்பவான்கள் எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக முந்நாள், இந்நாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் போல் ஆள் சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றார்கள்.
"இம்மாட்டில் எத்துறைகளில் ஆராய்ச்சி நிகழும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு முன்னேற்றத்துக்கும் எவ்வாறான வழிகளை இம்மாநாடு சுட்டிக் காட்டப்போகிறது?"- சென்னையில் 1968ல் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை நோக்கி பேரா.நா.வானமாமலை எழுப்பிய கேள்விகள், 1968, 1981, 1995 - என்று மூன்று பெரும் உலகத் தமிழ் மாநாடுகளும், செம்மொழித் தமிழ் மாநாடு முடிந்தபின்னும் பதில் அளிக்கப்படாமலே உள்ளன. எவ்வெத்துறைகளில் ஆராய்ச்சி வலுப்பெற வேண்டும் என்ற திட்டமிடல் இன்று கட்டுரைகள் பெறப்பட்டன. அவரவருக்கு எது சாத்தியப்படுமோ, அந்த வகையில் அவரவர் விருப்பத்துக்கேற்ப கட்டுரை தயாரித்திருந்தனர். ஆய்வரங்கில் கலைஞரின் பேச்சுக்கலை, தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் உரைத்திறன், கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக்கூறுகள், கலைஞரின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை என்றெல்லாம் 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்பதிலிருந்து ஆய்வரங்கத் தரத்தைக் கணித்துக் கொள்ளலாம். கனிமொழியின் இலக்கிய ஆளுமை பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. விமர்சகர்கள், ஆய்வாளர்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கு கட்டுரை வாசித்தவர்கள் பதில் சொல்ல இயலாமல் திணறியிருக்கிறார்கள். ஆய்வரங்கத்தில் பங்கேற்ற பலரும் கட்டுரையில் அல்லது தமது பேச்சின் ஒரு ஓரத்தில் கருணாநிதிக்கு நன்றி பாராட்டத் தவறவில்லை.
"பொது அரங்கில் ஒரே காக்காய் சத்தம்" என்று சுட்டிக் காட்டினார் ஒரு இதழாளர் (தினமணி 27.6.2010). கேலி செய்து விமர்சிக்கக் கூட ஒரு இதழுக்குத் துணிவு வந்தது ஆச்சரியம். ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அத்தனை கவனிப்பு. கவியரங்கப் பாட்டாளர்கள் கருணாநிதி புகழ்பாடினர் கருத்தரங்க உரையாளர்களும் அவ்வாறே. பட்டிமன்ற டமாரங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
திராவிட முன்னேற்றக்கழகம் துவங்கப்பட்டபோது இருந்த மூத்த தலைவர்களில் அண்ணா, கருணாநிதியைத் தவிர வேறு எந்தத் தலைவர்கள் பெயரும் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஒவ்வொருவராய் காலமாகிவிட, இன்று மிஞ்சியிருப்பவர் இனமானப் பேராசிரியர் என்றழைக்கப்படும் க.அன்பழகன். எதிரில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கருணாநிதியைச் சுற்றி இவர்கள் நாக்கு ஓடியதேயன்றி, பக்கத்தில் அமர்ந்த பேராசிரியரை எவரும் கண்டுகொள்ளவில்லை. 95 சதவீதம் பேர், துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் பெயர் உச்சரித்தார்கள். ஒரு ஐந்து சதவீதம் பேர் பேராசிரியர் பெயரைக் குறிப்பிட்டது, முகத்தாட்சண்யத்துக்காக என்பதுபோல் இருந்தது.
மன்னர் எதிரில் அமர்ந்திருக்க, வயிற்றுப் பசிக்கும், வாழ்வுக்கும் கையேந்திய முன்னைய புலவர்கள்போல் புகழாரம் சூட்டினார்கள். முந்தைய அடிமை முறை உயிர்கொண்டு இயங்கியது.
"நீர்கூட்டும் ஆறுகளின்
சமுத்திரச் சங்கமத்தை
யார்கூட்ட முடியும்?
நீர்கூட்ட முடியும்! கலைஞரே
நீர்கூட்ட முடியும்"
என்று முதல்காக்கையாக அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார்.
"முத்தமிழ்க்கலைஞர் பிறந்த நாள்
ஜூன் மூன்று
செம்மொழி தினமாக அறிவித்து
கொண்டாடி மகிழ்வோம்"
என்றார் ஆண்டாள் பிரியதர்ரினி.
நேரடியாக அறிவை விற்பதால் அவர்களுக்கொரு அங்கீகாரம் கிடைக்கலாம். ஆனால் எதிரில் அமர்ந்து, இதையெல்லாம் ஏற்று நிலப்பிரபுத்துவ முறையின் குணாம்சத்திலிருந்து சற்றேனும் விலகாத ஒரு ஜீவனாய் கருணாநிதி ரசித்துக்கொண்டிருந்தார்.
ஈரோடு தமிழன்பன் வந்தார்.
"பூக்கள் காண்பவரின் கண்களுக்காகப் பூக்கின்றன.
எம் கவிதைகள்
கண்களை நம்பிப் பூப்பதில்லை
கலைஞரை நம்பிப் பூக்கின்றன".
ஈழப்போர் கொடுமைகள் கண்டு கொதிப்புற்று உயிர்நீத்த முத்துக்குமார் பற்றி-
"முத்துக்குமார் கடிதத்தில் ஆங்காங்க
சிங்க நகங்கள்" என்றார். எதிரே அமர்ந்து கேட்கும் சிங்கத்துக்கு, நிகழ்காலத்தில் பிடிக்காத ஒரு சொல் முத்துக்குமார். அவருக்கு பிரியமான புகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்ட தமிழன்பன், பிடிக்காத ஒருவரை ஏன் குறிப்பிட்டார் என இதுவரை விளங்கவில்லை.
கையில் வேப்பிலை கொண்ட அருள்வந்த சாமியாடிபோல், கவிதை எடுத்து ஆடினார் வைரமுத்து.
"பூமி இடிஇடிப்பதை வானம் கேட்கட்டும்
எங்கே கலைஞருக்காக ஒருமுறை கைதட்டுங்கள்
வானம் கேட்கட்டும்" என்றவர் கருணாநிதியை ஒரு ஜீவநதியாக வருணித்து, அவரது அரசியல் வாரிசுகளை கிளை ஆறுகளாய் கற்பித்து,
"அரசாளப் போவதும் இந்த ஆறு
இது வரலாறு"
என்று பாரம்பரிய ஆட்சிமுறையை வரவேற்றார்.
"கிளம்பிற்றுகாண் சிங்கத்தமிழர் கூட்டம்" என்பது கவியரங்கப் பொதுத் தலைப்பு. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சிங்கக் கூட்டம் கிளம்பிய வேகம் கண்டு, காது கேட்காத தொலைவில் போய் நின்று அவ்வப்போது சிலர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பினர்.
"பனையோலையில் கணினித் தமிழ் எழுதிய
இக்காலத்து இளங்கோ நீ"
பாடினார் தமிழச்சி. இதுகாறும் அவர் படைத்த கவிதைகளும், அவைகளுக்குள் ஒளிந்திருக்கும் ஊற்றும் எல்லாமும் இந்தப் புளுகுநதியில் அடித்துச் செல்லப்பட்டன. இதற்குப் பரிகாரம் செய்வதுபோல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து 2010 ஜூலை தீராநதியில் மே18, 2010 என்று ஒரு கவிதையை எழுதியுள்ளார் தமிழச்சி. இதிலிருந்து இந்தக் கவிஞர்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் கணிப்பு, இவர்கள் "கல்யாணத்திற்கு ஒரு கவிதை, கருமாதிக்கு ஒரு கவிதை" தயாராய் வைத்திருப்பார்கள் என்பதுதான்.
அதிகாரம் கோலோச்சுகிற இடத்தில் யார் என்ன கோலம் கொள்வார்கள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாகும். அவரவர் வாழ்நிலைக்கேற்ப, வாழ்நிலையிலிருந்து உருவாகும் மனநிலைக்கேற்ப முடிவெடுப்பார்கள். எந்த வகை நிர்ப்பந்தம் அவரை வளைத்தது என்று சொல்லமுடியாது. கவிஞர் பழனிபாரதி,
"வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ"
என்ற பட்டினத்தார் பாடலை,
"காடுவரை பிள்ளை
கடைசிவரை கலைஞர்"
என்று தலைகீழாய் உலுக்கி எடுத்துவிட்டார்.
"கொன்று குவித்தோரில்
குற்றுயிராய்க் கிடப்போரே
கரம்கேட்டு எழுவதற்குக்
கதறி அழுவோரே
தற்காலிகமாய் அங்கே
ஈழம்தான் உமக்கில்லை
எப்போதும் எமக்கிங்கே
ஈனமானம் எதுவுமில்லை".
ஈழப் படுகொலைக்காய் நெருப்பாய்க் கொதித்து இந்தக் கவிதையைப் எழுதிய கவிஞர் இளம்பிறை, கவியரங்கில் பங்கேற்பார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. வேலை போய்விடுமாம் வேலை, அதுவும் அரசு வேலையிலிருந்து ஒருவரை, முறையான விசாரணை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிட இயலுமா? அப்படியான நெருக்கடிகளை எதிர்கொள்ள இயலாமல் ஏன் இந்தக் கவிதை எழுதினார்? அன்பின் நெருக்குதல்தான் மேடையேறச் செய்தது. அதைக் காப்பாற்ற கவியரங்கம் ஏறிய அவலநிலை பல எழுத்தாளர்களைப் போல் இவருக்கும் வாய்த்தது. அவர் எழுதிய கவிதை அவருக்கு எதிராகவே நின்றது. அவர் அனாதையாக்கிவிட்டது அவருடைய கவிதையை அல்ல. அவர் கைவிட்டது எண்ணற்ற சித்திரவதைக்குள் ஒடுங்கிய ஈழத்தமிழரை அல்ல. அவர் கைவிட்டது கொள்கையை. பெயரைச் சுட்டாமல் யாருடைய துரோகத்தைச் சுட்டிக் காட்டினாரோ, அந்தத் துரோகத்தை தன் முன்னால் வைத்துக்கொண்டு
"நானும் திருக்குவளைக்குப்
பக்கத்து ஊர்க்காரி"
என்று சொந்தம் கொண்டாடிய வேளையில் இனி அவருக்குள்ளிருந்து வரப்போகிற எல்லாக் கவிதைகளும் வேரற்றவையாய் வெளிவிழும் என்றுதான் பட்டது.
"உலகில் வேறெந்த நாடுகள் அழைத்தாலும், அல்லது நான் விரும்பினாலும் செல்வேன். எங்கள் இனத்தைச் சாய்க்க துணைபோன தமிழகத்தில் நான் காலடி வைப்பதைக் கூட பார்க்க முடியாது" என்று தமிழினப் படுகொலை முடிந்த மே 2009ன் பின் வெம்பி வெதும்பி கா.சிவத்தம்பி சொன்னதையும் முள்ளிவாய்க்கால் ரத்தக்கூடலுக்கு மேலாக நீந்தி, இப்போது கோயம்புத்தூர் வந்தடைந்ததையும் இணைத்துக் காணவேண்டும். செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கு சிவத்தம்பி வருகையை சில தீய சக்திகள் தடுக்க முயல்வதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை தந்தார். அதையும் தாண்டி அவர் வருவாரா? மாட்டாரா என்ற ஐயம் இருந்ததாக ஜூனியர் விகடன் (27.6.2010) கேள்வி எழுப்பியபோது, "நான் வரமாட்டேன் என்று யாரிடம் சொன்னேன். வருவேன் என்று யாருக்கு உறுதி அளித்தேன்? மாநாட்டு சமயத்தில் என் உடல்நலம்தான் முடிவு செய்யும் என் வருகையை" என்று சமத்காரமாகப் பதில் சொன்னார். சந்தர்ப்பவாதம், பலப்பல சமத்காரங்களுக்குள் தலைமறைத்துக்கொள்கிறது.
சிவத்தம்பி வந்துவிடக்கூடாது என்று அவரை மதிக்கிற நாங்கள் கவலை கொண்டோம். கவலைகொண்டு, அவருடன் கொழும்புவுடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எப்போதும் அன்பொழுக உச்சரிக்கும் சொல் "ராசா" என்றுதான் அழைப்பார்.
"உங்களை ஆய்வரங்கத் தலைவராக முதல்வர் அறிவித்துள்ளாரே" என்று கேட்டபோது,
"அப்படியா செய்தி வந்துள்ளது? எனக்குத் தெரியாதே" என்றார்.
"உங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவராகவே அறிவித்தாரா?" என்று கேட்டேன். அதற்கு, "இந்தச் சூழலில் நடத்துவது ஏற்றதல்ல என்று வி.சி.குழந்தைசாமிக்கு கடிதம் எழுதினேன்" என்றார். எங்களுடைய எதிர்பார்ப்பு என்ன எதிர்ப்பார்க்கிறோம் என்பதை விளக்கினேன். அவர் சொன்ன பதில், "மாநாடு நடக்க இன்னும் எட்டு மாதமிருக்கிறது ராசா. அதுவரை இந்த அரசியல் எதிலும் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை. கவனமாக இருப்பேன். அதுவரை வாயே திறக்கப் போவதில்லை".
தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து 4.11.2009ல் அவருக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன். உடல்நிலையைக் காரணம் காட்டி, மாநாட்டில் பங்கேற்காமல் இருக்க அவரது உறவினர் மூலம் சொல்லி அனுப்பப்பட்டுள்ளது என்று பேரா.தொ.பரமசிவன் என்னிடம் தெரிவித்தார். அதுவும் காரிய சாத்தியமாகவில்லை. பேராசிரியர் வந்தேவிட்டார்.
அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி, கண்காட்சி ஊரெல்லாம் அலங்காரம் என மக்களைப் போல் கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைப்பவர்களாக இவர்களைக் கருத இயலாது. வேறென்ன இவர்களை ஈர்த்திருக்கும். "ஒருவனின் பிரதான எதிரி யாரென்று கேட்டால் அது தற்பெருமைதான்" என்றான் சாணக்கியன். அரசியல் சாகசங்களைக் கற்றறிந்தானோ இல்லையோ, மனிதகுண விசித்திரங்களை நன்கு படித்திருந்தான் சாணக்கியன். தற்பெருமையின் உச்சம்தான், புகழும் அங்கீகாரமும் தேடுவது. புகழும் அங்கீகாரமும் மட்டுமே இவர்களை எதைநோக்கியும் ஓடச் செய்திருக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
தமிழரை வாழவைத்துத்தான் தமிழை வாழ வைக்க முடியும். தமிழனை அழித்துவிட்டு தமிழைக் காக்க முடியாது.
"சாதியற்ற தமிழன் நாங்கள் என்று
சந்தம் பாடு
தமிழ் வளர்த்த சிங்கத் தமிழர் வாழ்கவே"
என்பது சென்னை சங்கமம் கொண்டாட்டத்துக்கு இசைக்கப்பட்ட பாடல். சிங்கத் தமிழர் இல்லை. அந்த சொந்த ரத்தத்தை தெற்கில் 26 கி.மீ. அப்பால் கொன்று கொண்டாடியாகிவிட்டது. சங்கத் தமிழன் இல்லை. சாதித் தமிழன் மட்டுமே ஆட்டம் போடுகிறான். "ரெட்டை டம்ளர்" எனும் கொடுநெருப்பை இன்னும் மடியில் கட்டிக் கொண்டிருக்கிற கிராமங்களை என்ன செய்தோம்? சாதித்தமிழர், ஆதித்தமிழர் பிளவுகளை அருகருகே காத்து வருகிறோமா, இல்லையா? தமிழினத்தின் தண்டுவடமான தலித் மக்கள் உழைத்து வாழ முடிகிறதா? தமிழக மீனவர் ஆதாரம் பறிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் அன்றாடம் உயிர் பறிக்கப்படுகிறார்கள். குற்றுயிரும் குலைஉயிருமாய் விவசாயிகள் நகரம் நோக்கி ஓடுகிறார்கள். கனிம வளங்கள் வேட்டை, காடுகள் அபரிப்பு என மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வாழ்வியலிலிருந்து அகற்றப்படுகிற மக்களிடமிருந்து மொழியும் அகற்றப்பட்டுவிடும். தர்க்கப்பூர்வமாக, தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இதை சிந்தித்திருப்பாளர்களா?
தமிழனை வாழச் செய்யாமல் மொழியை வாழச் செய்யாமல் மொழியை வாழச் செய்வது என்பதோ, அவனுடைய வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக ஆக்காமல், தமிழ்வாழ்க என்பதோடு தமிழை வழிபாட்டு உருவாக மட்டுமே வைத்திருக்கப் பயன்படும்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகப் பதவி வகித்தவர் தமிழருவி மணியன். 2007ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசுக் குடியிருப்பு வீடு, பொது ஒதுக்கீட்டின் கீழ் இவருக்கு ஒதுக்கப்பட்டது. வாடகை வீட்டுக்கான குத்தகையை 19 மாதங்களாகப் புதுப்பிக்கவில்லையென்று, வீட்டைக் காலி செய்ய அரசு உத்தரவிட்டது. ஆனால் வீடுகள் ஒதுக்கப்பட்ட மற்றவர்களுக்கு குத்தகையை புதுப்பிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. "வீட்டு வசதிவாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" என்று தீர்ப்புக் கூறிய உயர்நீதிமன்ற நிதிபதி சந்ரு, தொடர்ந்து சொல்லியிருக்கிற வாசகம் முக்கியத்துவமானது, "வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தில் பெரிய அளவில் பொருத்தப்பட்ட நியான் விளக்கு பலகை உள்ளது. அதில் தமிழ் வாழ்க என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கவுரவப்படுத்தவேண்டும். தமிழ்ச் சிந்தனையாளர்களைப் பாதுகாப்பதன் மூலமே தமிழ்வாழும். அப்போதுதான் நியான் விளக்குப் பொருத்தப்பட்ட தமிழ்வாழ்க என்கிற வாசகம் மேலும் மிளிரும்" மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டோமென களிப்பில் மிதந்திருப்போருக்கு, தமிழ் வாழ்வது எப்படியென்று எடுத்துரைத்திருக்கிறார் நீதிபதி சந்ரு.
செம்மொழி மாநாட்டின் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் விழுந்த அடியாக இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழனை அவனுடைய வீட்டிலிருந்து விரட்டி, தமிழை அவன் வாழ்விலிருந்து விரட்டியடித்த பின் மொழியையும் விரட்டிவிட்டு, 380 கோடியில் உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்பதும் 500 கோடிகளில் கோவை நகர மேம்பாடு என்பதும் அந்த "நியான் விளக்கு" கதைதான். கருணாநிதி தனக்காகவும் கட்சிக்காகவும் மாட்டிக்கொண்ட டிஜிட்டல் விளம்பரப் பலகையாக ஆகியிருக்கிறது மாநாடு.
பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு, 4.11.2009ல் சூரியதீபன் எழுதிய கடிதம்.
தோழமையுடைய பேராசிரியர் அவர்களுக்கு, தங்களின் மின்னஞ்சல் தெரியாததினாலேயே, இந்த எழுத்து அஞ்சல். செம்மொழித் தமிழ் மாநாடு பற்றிய தங்களது கருத்துக்கள் - தங்களின் ஈரெட்டான நிலையை வெளிப்படுத்தியுள்ளன. தங்களின் உறுதிப்பாடற்ற, ஊசலாட்டம் எங்களைத் தடுமாற்றங்களுக்கு கூட்டிச் செல்கிறது.
2002 - அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டிற்கு தாங்கள் வந்திருந்தவேளை, நீங்கள் தலைமையுரை ஆற்றினீர்கள். "1920லிருந்து அரசியல் வடிவில் தமிழர்களின் உரிமைகள் பற்றி, எடுத்துக்கூறுகின்ற ஒரு குரல் காணப்படுகிறது. இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற பதிவே இல்லாமல் செய்யும் முயற்சி 1948லிருந்து தீவிரப்படுத்தப்பட்டது. தமிழினம் என்ற ஒன்றே இல்லாமல் செய்கிற முயற்சியின் எதிர்வினையாகவே ஈழத்தமிழர்களின் குரல் எழுந்துவரத் தொடங்கியது. தன் ஆளுமைக்குரிய மனித குணங்களைப் பெறமுடியாதபடி செயல்படுகிற ஒரு சூழலில் - நிர்ப்பந்திக்கப்படுகிற சூழலில் - அத்தளைகளிலிருந்து விடுபட மானுடத்தின் குரல் முன்னுக்குவரும். அது உலகப் பொது நியதியாகும். அது பாலஸ்தீனத்தில் கேட்கும் பிலிப்பைன்சில் கேட்கும் அமெரிக்காவில் கேட்கும். அந்தக் குரல் தமிழிலே பேசும் என்பது தவிர, இந்தக் குரலை வேறுவகையாக எடுத்துக்கொள்ளக் கூடாது.... இது ஈழத் தமிழர்களின் உரிமைக்கான ஒரு போராட்டமும் தேடுதலுமே தவிர இது எடுக்கும் வடிவங்களை வைத்துக்கொண்டு, அதற்கு எதிராகக் கூறப்படும் கருத்தை வைத்துக்கொண்டு, இந்த உரிமைப் போரை மதிப்பிடக்கூடாது".
தங்களின் இந்த உரையை - ஈழத்திலிருந்து நாங்கள் திரும்பியபின் நான் எழுதி வெளியான "ஈழக்கதவுகள்" நூலில் முழுமையாக எடுத்தாண்டுள்ளேன். (பக்.40,41). எனில் இந்த உரிமைப் போருக்கு எதிரான குரலில், எதிரான நிலைப்பாட்டில் 1990லிருந்து இயங்கி வருகிற ஒருவர் - உலகத் தமிழரின் அளவிலா வெறுப்பை அடைத்து மூடுவதற்கான ஒரு செயற்பாடாக செம்மொழித் தமிழ் மாநாட்டை முன்னிறுத்துகிறபோது அதில் கலந்துகொள்ளும் மனநிலை எவருக்கும் வருதல் கூடாது. கலந்துகொள்ளும் விருப்பம் எவ்வாறு தங்களிடமிருந்து வெளிப்பட்டது?
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் - என்ற முழக்கம் ஆட்சியாளருக்கு. எங்கே தமிழ், எதில் தமிழ் என்ற அவலம் மக்களுக்கு.
"தமிழ் வாழவேண்டும் தமிழன் வாழ வேண்டும் செத்துக்கொண்டிருக்கும் தமிழனை வாழவைக்கவேண்டும்" - இது 1983 படுகொலைக்குப்பின் பேசிய கருணாநிதி. இன்று தான் வாழ வேண்டும் தன் குடும்பம் வாழ வேண்டும் முதலாளியக் குடும்பமாக வாழ வேண்டும். தன் கட்சி வாழ வேண்டும் அதிகாரத்தின் உச்சத்தில், பதவிகளின் உச்சத்தில் வாழ வேண்டுமென்று சுருக்கிக் கொண்ட இன்றைய கருணாநிதி.
"கலைஞர் போன்ற சிறந்த தமிழறிஞர் முயற்சியில் நடைபெறுகிற மாநாடு" என எடுத்துரைக்கிறீர்களே, உங்களுடைய அறிவுப் புலம், புலமைச் செருக்கு கேள்விக்குள்ளாகப் படுதல் கொண்டு நாங்கள் வேதனை கொள்ளச் சம்மதமோ?
கலைஞர் கருணாநிதியின் மொழிப்பற்றை, இனப்பற்றை அவருடைய வர்க்கப்பற்று விழுங்கிவிட்டது. இன்று கருணாநிதி சாதாரண அரசியல்வாதியல்ல. அவருடைய குடும்பம் இந்தியப் பெருமுதலாளிகளுடன் ஒன்றாக ஆகிவிட்டது. இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இலங்கைத் தீவு ஒரே தீர்வாக இருப்பதுதான் முக்கியமேயன்றி, தமிழ்மக்களின் விடுதலைப் போர் அல்ல. எனவே இந்தியப் பெருமுதலாளியாகிவிட்ட கருணாநிதி - தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இன அழிப்புக்குத் துணை போனார் என்பதுதானே உண்மை.
"ஈழம் - வன்மமும் அவதூறுகளும்" என்ற எனது சிறுநூலை இத்துடன் தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். அதில் "இந்தியத் துரோகத்தின் தமிழ்வேர்" - என்ற கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ள வேண்டுகோளையும் வாசிக்க கேட்டுக்கொள்கிறேன்.
எங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் சரி. ஐயா, உங்களைப் பற்றி வேறுபாடாக நினைக்க வைத்துவிட வேண்டாம்.

அந்தமானில் இன்று அதிகாலையில் கடும் நிலநடுக்கம்

போர்ட்பிளேர், ஆக. 10-
அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி அபாயம் ஏதும் ஏற்படவில்லை.
கடலுக்கடியில் 32 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 3.51 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4 புள்ளிகளாகப் பதிவானது. போர்ட்பிளேரில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை அந்தமான் முழுவதுமே உணர முடிந்தது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறிக் கொண்டு கட்டடங்களை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சுனாமி அலைகள் ஏதும் உருவாகவில்லை.

நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை........



Moon water dreams evaporate - World News Headlines in Tamil நிலவில் தண்ணீ­ர் இருக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நிலவில் தண்­ணீர் இருக்கலாம். நிலவின் உட் பகுதியில் அது பனிக்கட்டியாக உறைந்திருக்கலாம் என்றெல்லாம் சமீபகாலமாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் கோளியல் பிரிவின் பேராசியர் காரி ஷார்ப் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியுள்ள ஆய்வு இந்த நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்துள்ளது. நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறைகளில் உள்ள குளோரினின் அளவை ஆய்வு செய்த இந்தக் குழுவினர் அங்கு தண்ணீ­ர் இருக்கவே வாய்ப்பில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.

கைராசியானவர்

"எங்க ஆபீஸ்ல கூட்டி பெருக்க ஒரு ஆள் வேணும்..." "முன் அனுபவம் இருக்கணுமா?"
"ஏதாவது ஒரு கம்பெனில அஞ்சு வருஷம் குப்பை கொட்டிருந்தா போதும்!"
வி.சாரதிடேச்சு
2. "உங்க மனுவை ஏன் மகளிர் அணி தலைவி இடுப்புல சொருகிட்டு போறாங்க?"
"தலைவரோட பார்வைக்கு செல்ல வேண்டாமா?"
எஸ்.எஸ்.பூங்கதிர்
3. இந்த ஆபரேஷனுக்கு அப்புறம் உங்க மனைவிக்கு பேச்சே வராது...!"
"நீங்க இவ்வளவு கைராசியானவர்னு முன்னாலயே தெரியாமப் போச்சே டாக்டர்...!"
தே.ராஜாசிங் ஜெயக்குமார்
4. "கோட்டையில நாலாபுறமும் மகாராணி கட்அவுட்டை மன்னர் நிறுத்தி வச்சிருக்காரே... ஏன்?"
"படையெடுத்து வர்ற எதிரி மன்னனுக்கு பயம் காட்டத்தான்!"
அம்பை தேவா
5. "எதுக்கு பக்கத்து வீட்டுக்காரியோட புடவையை வாங்கி கட்டிக்கிட்டு இருக்கே...?"
"அப்படியாவது நீங்க என்னைப் பார்த்து பல்லைக்காட்டறீங்களான்னு பார்க்கலாம்னு தான்...!"
வி.சாரதி டேச்சு

தமிழ் கடி ஜோக்ஸ்

மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லை
மகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா: ???????

ஒரு சர்தார் வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்கு தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று. முன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி. அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு சர்தார் மாதவ் சிங் வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார்..
"கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம்!
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார்!!!!

கோபால் : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார்?
ஆசிரியர் : தரமாட்டேன். ஏன்?
கோபால் : நான் HOME WORK செய்யலை சார்!

நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்

முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்

எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மெகா திரைப்படமான எந்திரன் தெலுங்கு உரிமையை போலிப் பத்திரம் மூலம் விற்க முயன்ற இயக்குநர் ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் அலுவலகத்தில் புரொடக்ஷன் மேனேஜராக இருந்தவர் உதயகுமார். இவரும் திருப்பதி திருமலா பிலிம்ஸ் அலுவலக ஊழியர் சுரேந்திரன் என்பவரும் போலியாக சில ஆவணங்களைத் தயாரித்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.27 கோடிக்கு எந்திரன் தெலுங்கு உரிமையை விற்றுவிட்டதாக அந்தப் பத்திரங்களில் பக்காவாக எழுதியிருந்தனர். இந்தப் பத்திரத்தின் நகல்களை வைத்துக் கொண்டு இருவரும் ஆந்திராவில் உள்ள அனைத்து திரையரங்கு உரிமையாளர்களையும் தொடர்பு கொண்டு ரோபோ படத்தை திரையிட பேரம் பேசியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களும் இவர்களை நம்பி அட்வான்ஸாக ரூ.2 கோடி வரை கொடுத்துள்ளனர். இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வந்ததும், உடனடியாக சன் பிக்ஸர்ஸ் நிறுவன சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா சென்னை போலீஸில் உதயகுமார் மீது புகார் பதிவு செய்தார். பின்னர் ரோபோ உரிமை யாருக்கும் விற்கப்படவில்லை என்று அறிவித்துவிட்டார். உடனடியாக ஷங்கரின் புரொடக்ஷன் மேனேஜர் உதயகுமார் கைது செய்யப்பட்டார். திருப்பதி திருமலா பிக்சர்ஸ் ஊழியர் மீதும் ஹைதராபாத் போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரியன் சுட்டெரிக்கும்னு தெரிஞ்சே போனா என்ன செய்றது?

Cricket

MICROMAX CUP TRI NATION 2010 – POINTS TABLE







Teams
M
W
L
MT
NR
BP
POINTS
NRR
New Zealand
1
1
-
-
-
1
5
+4.00
India
1
-
1
-
-
1
0
-4.00
Sri Lanka
-
-
-
-
-
-
-
0











This entry was posted in Media Centre, Sri Lanka Triangular Series.

Murali: The man who reinvented spin bowling

Muttiah Muralitharan, who played his last Test on Thursday, may have been the greatest bowler to spin a cricket ball. Sports writer Suresh Menon reflects on the career of a remarkable cricketer.
Before the start of the Galle Test, Muttiah Muralitharan's last, India's ace spinner Anil Kumble paid him one of the warmest tributes from one great bowler to another.
"When you see that Murali has played exactly the same number of Tests as me and taken 173 wickets more," he said, "you begin to understand the magnitude of his achievement."
Spin bowling is about masks and disguises, sleights of hand and tempting arcs.
Batsmen reach for the ball that is not there, or adopt a superior air, ignoring the one that seems set to go past but then inexplicably changes course. They are rendered illiterate - unable to read the spinning ball.
Muralitharan's greatness lay in the fact that even when batsmen read him, there was little they could do to keep him out.
Test cricket's most successful bowler is 38, and even if the spirit is willing there is only so much a body can do.
Defining the delivery Murali's record 800 wickets are likely to stand forever given the diminishing interest in Test cricket, but figures do not tell the full story.
Murali was responsible for cricket's first proper attempt to define the legal delivery.
Thanks to his action, umpires know there is a difference between what the eye sees and the computer calculates.
That he reinvented the art of spin bowling tends to be forgotten in the light of this fundamental contribution.
While studying Murali's action, it was noticed that some of the finest bowlers known for their smooth actions did, in fact, send down illegal deliveries.
By the earlier system - the naked eye - someone like Australian fast-bowler Glenn McGrath was seen as picture perfect. Then technology showed that he too fell outside the demands of the legal.
Muttiah Muralitharan posters in Colombo Muralitharan is a national icon
That led to a new world order where a flexion (the act of bending) of 15 degrees of the bowler's arm was allowed.
Those who criticise him base their observations on the naked eye; those who absolve him go by the definition. Murali's action is legal, but he has suffered more than anyone needs to.
Few cricketers have had to shoulder his burdens - as a minority Tamil in a strife-laden country, as a bowler worshipped and reviled in equal measure, as a player in a team whose fortunes rose or fell according to his performance.
In nearly two decades at the top, he won over everybody - both sides of the ethnic divide and both sides of the bowling-action divide.
His work after the 2004 tsunami in Sri Lanka released him from the narrow confines of a sporting hero and anointed him a national icon. Through it all he has remained rooted, a charmer who finds it hard to believe that by merely doing what he loves the most, he has rewritten the rules of his craft.
Unlike most spinners, Murali didn't appear on the international scene a finished product, every trick in place, every nuance worked out.
It took him 27 Tests to claim 100 wickets; the hundreds thereafter came in 15, 16, 14, 15, 14 and 12 Tests respectively.
This wasn't a genius that was created behind closed doors, but one that evolved out in the open, in front of thousands of spectators.
Symbol Every ball, every wicket, was tucked away in that remarkable mind; nothing was forgotten, nothing was useless. Muralitharan is the man who remembers everything.
He brought to the craft a new way of doing things, converting a finger-spinning exercise into a wrist-spinning one. He remains the symbol of a resurgent Sri Lanka, a talented side from its pre-Test days but one that needed a touch of iron to perform consistently.
Muttiah Muralitharan cut out at Galle Muralitharan was worshipped and reviled in equal measure
Sri Lanka have won 61 Test matches in all. Muralitharan has played significant roles in 54 of these, claiming 438 wickets at 16.18, taking five-wicket hauls an incredible 41 times.
He might have finished with the best-ever figures for a single innings, but after he had claimed nine wickets against Zimbabwe at Kandy, Russel Arnold dropped a catch at short leg. Then, while bowlers at the other end tried desperately not to take a wicket, Chaminda Vaas accidentally had the last man caught behind amid stifled appeals.
Murali has taken 10 wickets in a match four games in a row. Twice.
That record alone would have ensured Murali a place in the pantheon.
But his influence is not restricted to his country's improved performance.
With better bats, shorter boundaries and tougher physiques, batsmen have threatened to eliminate the offspinner from the game.
Murali has kept the craft alive with a simple ploy - being successful at it. By developing the doosra - a ball which turns the opposite way to a traditional off-break - that was invented by Saqlain Mushtaq, he widened its scope.
He expanded the horizons of the game, bringing in elements that make it more complex, and therefore more interesting, and providing challenges in the meeting of which international batsmen made their reputations.
Nobody bowls like Murali; sadly, not even Murali towards the end, and the time had come. But he will be missed, as any one-of-a-kind performer will be.
There is no "Murali" school of bowling, no successor who bowls in his unique style. Murali stood alone, and now that he is gone, only memories - and video replays - remain.
Suresh Menon is a leading sports writer who is based in Bangalore.

Salman Butt concerned by Pakistan fielding errors

Pakistan captain Salman Butt said his players must work hard to eradicate the fielding errors which cost his side in their second-Test defeat by England.
The tourists fell to a nine wicket-defeat at Edgbaston and Butt was left to rue missed catches on day four, including three off Andrew Strauss.
"We have got to work on the fielding and try harder. We dropped four catches again today," said Butt.
"If we had held all of our catches it would have been a pretty even game."
Pakistan's fielding has been poor throughout the series and things got no better for Butt's side on Monday.
England could have been 17-2 early on when off-spinner Saaed Ajmal, with only his third ball, induced an edge from Strauss but debutant wicketkeeper Zulqarnain Haider could not hold the tough catch.


Haider then failed to hold a simpler chance off a defensive edge from England captain Strauss, on 38, with Ajmal again the unlucky bowler.

The errors prevented Pakistan getting back into the game but they will have the opportunity to work on their fielding in a two-day match against Worcestershire on 13 August before the third Test gets underway at The Oval on 18 August.
Pakistan had made 72 in the first innings, their lowest score against England, leaving them on the back-foot from the start of the second Test.
However, after slumping to 94-5 in their second innings, a remarkable rally from Haider (88) and Ajmal (50) took Pakistan to 291-9.
They eventually fell for 296 on day four but Butt was upbeat after his side showed encouraging signs.
"As the game goes on the guys show glimpses of where they can be in the future, they just have to work hard and be patient," said Butt.
"We as players have to back each other up and try harder."

Oldest signs of tool-making foundHominin skulls

Hominin skulls (SPL)

Researchers have found evidence that hominins - early human ancestors - used stone tools to cleave meat from animal bones more than 3.2 million years ago.
That pushes back the earliest known tool use and meat-eating in such hominins by more than 800,000 years.
Bones found in Ethiopia show cuts from stone and indications that the bones were forcibly broken to remove marrow.
The research, in the journal Nature, challenges several notions about our ancestors' behaviour.
Previously the oldest-known use of stone tools came from the nearby Gona region of Ethiopia, dating back to about 2.5 million years ago. That suggests that it was our more direct ancestors, members of our own genus Homo, that were the first to use tools.
But the marked bones were found in the Dikika region, with their age determined by dating the nearby volcanic rock - to between 3.2 million and 3.4 million years ago.
A battery of tests showed that the cuts, scrapes and scratches were made before the bones fossilised, and detailed analysis even showed that there were bits of stone lodged in one of the cuts.
In Lucy's hands The only hominin species known from the Dikika region at that time was Australopithecus afarensis, the species represented by the famed "Lucy" fossil, and one that is hypothesised to be a direct ancestor of Homo and therefore of us.
But Lucy and her contemporaries were thought to be vegetarians, and many had assumed that tool use arose only in later, Homo species.
Dikika region map
Study co-author Zeresenay Alemseged, the palaeoanthropologist from the California Academy of Sciences in San Francisco who leads a large research effort in the region, said that the find overturns much of what was thought about A. afarensis.
"For 30 years, no-one has been able to put stone tools in their hands, and we've done that for the first time," he told BBC News.
"We are showing for the first time that stone tool use is not unique to Homo or Homo-related species - we have A. afarensis now behaving like Homo in a way both by using tools and eating meat. It's another attribute that could enable us to link A. afarensis to the genus Homo."
The conclusions, however, are based on a small number of bones, and the inference of stone tool use is made indirectly: no tools were actually found at the site. That means it remains unclear if A. afarensis actually made the tools from larger bits of stone, or simply used sharpened fragments that were found.
'Big story' Both Alemseged and Shannon McPherron, an archaeologist from the Max Planck Institute of Evolutionary Anthropology in Leipzig, Germany, and lead author of the study, say that the next task is to return to the region and keep looking for evidence to tie up the story.
They hope to establish that it was in fact A. afarensis that used the tools, rather than any other species that has not yet been found in the region.
"It's always hard to associate a behaviour with a particular hominin," Dr McPherron explained to BBC News.
"We're never so lucky as to find a hominin dead with the archaeology in its hand."
Close-up of cuts in Dikika bones Analysis showed the cuts were definitely made by stone, not scavengers
But more than that, the team want to look for tools and any potential evidence of their manufacture, to find what kind of tools the A. afarensis butcher actually had.
The previous record-holders for oldest stone tools seemed relatively advanced, Dr McPherron explained, so experts have guessed for some time that less sophisticated tools would be found.
"What we can now think about is a fairly extended period of time when these hominins were experimenting with stone, perhaps using naturally occurring flakes," he said.
"But at some point they would've started to make their own. What we need to do is fill in that time period."
Chris Stringer of the Natural History Museum in London cautions against making firm conclusions about the development of tool use, given the limited number of artifacts from the current find.
"We have to be cautious that these are just a couple of bones with what seem to be cut marks on them; one would like to have stone tools associated with them to really clinch the case," he told BBC News.
However, he agrees that pushing the first known date of tool use back by nearly a million years is, regardless, "a big story".
"It suggests that meat-eating and butchery behaviour is pre-human - it's an ancestral behaviour and as such it gives an interesting perspective on the Australopithecines that we didn't have before," he said.
"They seemed to be vegetarian and lacking significant aspects of human behaviour, and in a sense this would bring them somewhat closer to us."


க.பொ.த உயர் தரப் பரீட்சை எழுதுகின்றமைக்காக கண்டியில் உள்ள பிரபல மகளிர் கல்லூரிக்கு..................................

Cricket

WHICH TEAM WILL WIN THE TRIANGULAR SERIES??????????
  • SRILANKA
  • INDIA
  • NEWZEALAND
GIVE YOUR PREDICTIONS???????    TO ME...........................

மன்னாரில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

மன்னார் ஓலைத்தொடுவாய்க் கடற்கரைப் பகுதியில் மிகவும் உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலத்தை மன்னார் பொலிஸார் மீட்டு இன்று புதன்கிழமை மாலை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

அப்பகுதியில் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மேற்படி சடலத்தைக் கண்டு கடற்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடற்படையினர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். 30 வயது மதிக்கத்தக்க இவரது கையில் கடிகாரம் காணப்பட்டது. கறுப்பு நிற நீளக்காற்சட்டையும், வெள்ளை, கறுப்பு நிற சட்டையும் அணிந்துள்ள நிலையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Triangular Series, 1st Match: India v New Zealand at Dambulla, Aug 10, 2010 Results & Full Scorecard

New Zealand Innings:

Batsmen
R
B
4s
6s
SR
Peter Ingram
c M Dhoni b A Nehra
12
17
2
0
70.59
Martin Guptill
c M Dhoni b P Kumar
11
6
2
0
183.33
Ross Taylor (c)
lbw b A Nehra
95
113
8
1
84.07
Kane Williamson
b P Kumar
0
9
0
0
0.00
Scott Styris
b P Ojha
89
95
9
1
93.68
Jacob Oram
lbw b A Nehra
14
10
2
0
140.00
Grant Elliott
st M Dhoni b Y Singh
7
13
0
0
53.85
Gareth Hopkins (wk)
c D Karthik b P Kumar
10
11
0
0
90.91
Daryl Tuffey
c P Ojha b A Nehra
19
13
2
1
146.15
Kyle Mills
run out (S Raina)
9
5
2
0
180.00
not out
0
1
0
0
0.00
Extras:
(b 1, lb 12, w 9)
22
Total:
(10 wkts, 48.5 ovs)
288
RR:
5.90
Bowling: Ind
O
M
R
W
Nb
Wd
ER
Praveen Kumar
9
3
43
3
0
1
4.8
Ashish Nehra
9.5
1
47
4
0
3
4.8
Abhimanyu Mithun
4
0
24
0
0
3
6.0
Pragyan Ojha
10
0
58
1
0
1
5.8
Ravindra Jadeja
9
0
63
0
0
0
7.0
Yuvraj Singh
4
0
23
1
0
0
5.8
Virender Sehwag
3
0
17
0
0
1
5.7
  Fall Of Wickets
Wkt
Batsmen
Score(Over)
Wkt
Batsmen
Score(Over)
1st
M Guptill
15(2.3)
6th
R Taylor
241(42.2)
2nd
P Ingram
27(5.2)
7th
G Elliott
254(44.4)
3rd
K Williamson
28(6.5)
8th
G Hopkins
277(47.1)
4th
S Styris
218(38.3)
9th
D Tuffey
288(48.4)
5th
J Oram
236(40.5)
10th
K Mills
288(48.5)


Indian Innings:
Batsmen
R
B
4s
6s
SR
Dinesh Karthik
lbw b D Tuffey
14
20
2
0
70.00
Virender Sehwag
c G Hopkins b K Mills
19
23
3
0
82.61
Rohit Sharma
c R Taylor b D Tuffey
4
11
0
0
36.36
Yuvraj Singh
c R Taylor b A McKay
5
25
1
0
20.00
Suresh Raina
c S Styris b D Tuffey
6
6
1
0
100.00
MS Dhoni (c & wk)
run out (D Tuffey)
2
9
0
0
22.22
Ravindra Jadeja
c S Styris b K Williamson
20
44
2
0
45.45
Praveen Kumar
c R Taylor b J Oram
1
8
0
0
12.50
Abhimanyu Mithun
c R Taylor b J Oram
4
16
0
0
25.00
Ashish Nehra
c J Oram b K Mills
4
11
1
0
36.36
not out
0
4
0
0
0.00
Extras:
(w 9)
9
Total:
(10 wkts, 29.3 ovs)
88
RR:
2.98
Bowling: NZ
O
M
R
W
Nb
Wd
ER
6.3
2
26
2
0
1
4.0
Daryl Tuffey
8
1
34
3
0
1
4.2
Andy McKay
6
0
11
1
0
2
1.8
Jacob Oram
6
0
15
2
0
1
2.5
Fall Of Wickets
Wkt
Batsmen
Score(Over)
Wkt
Batsmen
Score(Over)
1st
V Sehwag
39(6.6)
6th
Y Singh
62(16.5)
2nd
D Karthik
39(7.1)
7th
P Kumar
67(19.1)
3rd
R Sharma
44(9.2)
8th
A Mithun
82(25.6)
4th
S Raina
50(11.2)
9th
R Jadeja
84(28.2)
5th
M Dhoni
53(13.5)
10th
A Nehra
88(29.3)