WELCOME.........

MY POSTS...சரல் என்ற புதிய செயற்கை கோள் 2011-ல் ஏவப்படும்,வளர்ச்சி காணும் பின்ங் தேடு பொறி,ஆறுமுக நாவலர்,நடை - நோய்க்கு தடை!,பருவகால மாற்றங்களும் உலகமயமாதலும்,அழியப் போகும் மொழிகளின் பட்டியலில் தமிழ்?!,டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai ),செம்மொழித் தமிழ் மாநாடு - இன்னுமொரு டிஜிட்டல் விளம்பரம்,நிலவில் தண்ணீ?ர் இருப்பதற்கு வாய்ப்பில்லை,கைராசியானவர்,தமிழ் கடி ஜோக்ஸ்,எந்திரனை விற்க முயன்ற தந்திரன்!,Cricket,Murali: The man who reinvented spin ,Oldest signs of tool-making foundHominin skulls,Cricket,தேசிய பாதுகாப்பு தினம் : இம்முறை யாழில்,கூகுள் அண்ட்ரோயிட்டைத் தாக்கும் புதிய 'ட்ரொஜன்' ,தமிழும் சமயமும்,Jokes & Funny Pictures-Funny Doctor & patient Discussion,அன்னை தெரேசா,தொமஸ் அல்வா எடிசன்,மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,குட்டன்பேர்க்,பெஞ்சமின் பிராங்கிளின்,மார்க்கோனி,சராசரிக்கும் குறைவான வெப்பநிலையில் வாழ்பவர்கள் மாரடைப்பு நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல்,2590 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்ட சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு

Thursday, August 12, 2010

டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை (1896 - 1961) ( R. P. Sethu Pillai )

திருநெல்வேலியில் தோன்றிய ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றவர். செந்தமிழ் நலங்கனிந்த சொற்பொழிவாற்றுவதிலும் உரை நடைபெழுதுவதிலும் ஒப்பற்ற ஆர்வமும் திறமையும் உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். "திருவள்ளுவர் நூல்நயம்", "தமிழகம் ஊரும் பேரும்", "தமிழின்பம்" போன்ற இவர்தம் நூல்கள் இனிமைமிக்க செந்தமிழ் உரைநடைக்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும். இவர் தம் தமிழ்த் தொண்டைப் பாராட்டி இவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகம் "டாக்டர்" பட்டம் சூட்டியது.
தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு; தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர்; வடக்கேயிருந்துவரும் குளிர்காற்றை " வாடை" என்றார்கள் ; தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் " தென்றல்" என்றார்கள் . வாடையென்ற சொல்லிலே வன்மையுண்டு; தென்றல் என்ற சொல்லிலே மென்மையுண்டு . தமிழகத்தார் வாடையை வெறுப்பர்; தென்றலின் மகிழ்ந்து திளைப்பர்.
- ரா.பி. சேதுப்பிள்ளையின் (தமிழின்பம்).

No comments:

Post a Comment